நுவரெலியா மாவட்டத்தில் 3 நாட்களில் 40,000 பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நந்தன கலப்பட இன்று(9) தெரிவித்துள்ளார்.
12,13,14 ஆம் திகதிகளிலேயே 40,000 பேருக்கு தடுப்பூசி தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்துக்கு 50,000 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்க பணியாளர்களுக்கும் இலங்கை போக்குவரத்துச் சபை, இலங்கை மின்சார சபை, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பகமுவ, மஸ்கெலியா உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 9,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.