ஏறாவூர்ப் பிரதேசத்தில் அறுபது வயதிற்குக்கூடிய 884 பேருக்கு சைனோபாம் கொரோனா தடுப்பூசி இன்று வழங்கப்பட்டது.
பிரதேச சுகாதார வைத்தியதிகாரி திருமதி சாபிறா வசீம் முன்னிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீராகேணி கிராம சேவகர் பிரிவிலுள்ள508 பேர் மாக்கான் மாக்கான் தேசிய பாடசாலை நிலையத்திலும் ஏறாவூர் – 3 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 376 வயோதிபர்கள் ஏறாவூர் அல்- ஜுப்ரிய்யா பாடசாலை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்திலும் தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டனர்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் இத்தடுப்பூசியை
ஏற்றிக்கொண்டதில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.