பயணக்கட்டு 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை – இராணுவ தளபதி

0
824

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பதில் அளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.