வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான 10000 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதியினை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் சுய தனிமைக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் கண்காணிப்பில் வழங்கிவைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 11 குடும்பத்தினை சேர்ந்த 50 பேர் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டே உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.