கொரோனாவால் 98 இலங்கையர் வெளிநாட்டில் உயிரிழப்பு! சவுதியில் 34 மரணங்கள் பதிவு – வெளிவிவகார அமைச்சு

0
196

வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் 98 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்தனர் எனவும் அதில் சவுதி அரேபியாவிலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை வெளிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இதுவரையில் சவுதி அரேபியாவில் மட்டும் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், ஓமானில் 4 பேரும், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் தலா இருவரும் இஸ்ரேலில் ஒரு இலங்கையரும் உயிரிழந்தனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் வசித்து வந்த ஐந்து இலங்கையர்களும் அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா நான்கு உயிரிழப்புக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ளன.

அதேநேரம், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா இரு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன், ஈரானில் ஒருவர் உயிரிழந்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்;பட்டுள்ளது.