எரான் விக்கிரமரட்ணவிடம் இரு மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை

0
197

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நேற்று தன் மீது இரு மணித்தியாலங்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விசாரணைக்காக அவருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமைய நேற்றுப் பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜராகி இருந்தார். கொழும்பு – மாளிகாவத்தையில் வைத்து அண்மையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் மாகந்துரே மதுஷ் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி ஆகியோர் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்துத் தொடர்பிலேயே தன் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது என எரான் விக்கிரமரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.