அம்பாறை மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

0
152

ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் இடம்பெற்றன.

திருக்கோவில் கல்விவலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் பங்குபற்றியிருந்தமையை காணமுடிந்தது.

இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு மதஸ்தலங்களில் மாணவர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இறை வழிபாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் ஆலய பிரதம குருசிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்களின் ஆசியை பெற்றுக் கொண்டதுடன் பெற்றோர்களையும் வணங்கி பரீட்சை நிலையத்தினுள் நுழைந்ததையும் அவதானிக்க முடிந்தது.

கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட போதும் இம்முறை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் காணப்பட்டதையும் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தியதையும், அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.