மட்டு.ஏறாவூர் மக்காமடி வீதி பாலத்தினை புனரமைக்கும் பணி ஆரம்பிப்பு

0
162

மட்டக்களப்பு ஏறாவூர் மக்காமடி வீதி பாலத்தினை புனரமைக்கும் பணி நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது.

கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வீதிகள் அமைச்சினால் சுமார் 52 இலட்சம் ரூபா நிதி பாலம் புனரமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர்
எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த பாலமானது கடந்த பல தசாப்த காலமாக புனரமைக்கப்படாதிருந்ததனால் மழைக்காலங்களில் மக்காமடி பிரதேசம் பாரிய வெள்ளத்தில் மூழ்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.