தீக்காயங்களுக்குள்ளான குடும்ப பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு!

0
222

யாழில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்ப பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் நாவந்துறை யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா வயது(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என பொலிஸார் கூறினர். கனவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக மேற்படி பெண் கடந்த 17ம் திகதி தனக்குதானே தீ மூட்டியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.