இந்திய-இலங்கை மீனவர்களுக்கிடையில் நடுக்கடலில் முரண்பாடு!

0
240

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் காணாமல்போன மீனவர்களைத் தேடிச் சென்ற, வடமராட்சி மீனவர்களிற்கும், இந்திய மீனவர்களுக்குமிடையே
முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கடலிற்குச் சென்ற வத்திராயனைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.
அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நேற்றைய தினம் தேடுதல் இடம்பெற்றபோது, இந்திய இழுவை மடிப் படகு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்துள்ளது.
வடமராட்சி மீனவர்களின் படகை, இந்திய இழுவை மடிப் படகுகள் மோதி மூழ்கடித்திருக்கலாம் என சந்தேகம் கொண்ட வடமராட்சி மீனவர்கள்
இந்திய இழுவைப் படகை இடைமறித்துள்ளனர்.
இதன்போது இருதரப்புப்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.