மட்டக்களப்பில் உழவர் விழா பொங்கல் பூஜை நிகழ்வுகள்

0
175

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் உழவர் விழா பொங்கல் பூஜை நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால தலைமையில் உழவர் விழா பொங்கல் பூஜை நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி தேசிய இளைஞர் சேவை மன்ற அலுவலக முன்றலில் நடைபெற்றது.

உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்றிப் பெருநாளாம் உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட உழவர் விழா பொங்கல் பூஜை நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் மஜீட் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்ற அதிகாரி நிசாந்தி அருள்மொழி, புதுக்குடியிருப்பு பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி என்.குகதாஸ், நெஸ்கோ முகாமையாளர் சதீஸ்வரி, தகவல் நிலைய பொறுப்பதிகாரி ஹனிபா மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.