குளவி கொட்டு: 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
375

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (03) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 8 பெண் தொழிலாளர்களும் ஒரு உதவி ஆண் வெளிக்கள உத்தியோகத்தர் உட்பட ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, பொகவந்தலாவை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வை.எல்.பி.பஸ்நாயக்க தெரிவித்தார்.