கேகாலை, நூரிய பொலிஸ் பிரிவுக்கு கிரிஹேன, ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்களில் 9 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்ஹேட்டிகம பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியே நீரில் மூழ்கி மரணமடைந்தார்.
நீரில் மூழ்கிய சிறுமியை மீட்டு தெரணியகல வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
பிரதேப் பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.