பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து இடும் மக்கள் போராட்டம், இன்று கிளிநொச்சி பொதுச் சந்தையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து கையொப்பம் இட்டுச்செல்வதை அவதானிக்க முடிகிறது.
போராட்டத்தில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.