கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு விளக்கமறியல்

0
116

ஹம்பாந்தோட்டை தங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விதாரன்தெனிய பிரதேசத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலைசெய்ததுடன் மற்றுமொருவரை காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்கல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வீரக்கெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பெரிலஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.