இரத்தினபுரி, குருணாகல் ஆகிய பிரதேசங்களில், உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டு, வெடிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, பலாங்கொடை பொலிஸ் பிரிவு விக்கிலிய பிரதேசத்தில், பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குருணாகல் வாரியபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது உள்நாட்டு துப்பாக்கி, ஹக்கப்பட்டாசு எனும் வெடிப்பொருட்கள் நான்கு, இரண்டு கிராம் வெடிமருந்துகள், 04 தோட்டாக்கள், மான் தோல் மற்றும் நான்கு கிலோகிராம் மான் இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மலகனே பிரதேசத்தை சேர்ந்த 49 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.