கனடாவில் வாழ்கின்ற ஸ்ரீஸ்கந்தராஜா நிர்ஜாவின் 19வது பிறந்த தினத்தையொட்டி வீரமுனையில் வாழ்கின்ற மக்களுக்கென ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வீரமுனையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு இக் கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது.
காரைதீவு பிரதேசசபை தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்வில் சம்மாந்துறை உதவிக்கல்விப்பணிப்பாளரும்,சமூக சேவையாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டு குழந்தை களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கனார்கள்.