மட்டக்களப்பில் விசேட தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு

0
174

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் கீழ் இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்திலும் தடுப்பூசி ஏற்றும் பனிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை கொரோனா தொற்றுக்கான எதுவித தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை அவசியமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விசேட விதமாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்காக விசேட சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் வழிகாட்டலின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் மட்டக்களப்பு புளியந்தீவு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான தடுப்பூசிகள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் ,மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான தடுப்பூசிகள் மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்திலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.