அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில் உரிய அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக 30க்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கொண்டு சென்ற இருவரை கல்முனை பொலிசாஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கால்நடைகளை லொறி ஒன்றில் அடைத்து சென்ற நிலையில் மீட்கப்பட்ட ஆடுகள் தொடர்பிலான நடவடிக்கையினை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.எம். லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற 47 வயது மற்றும் 59 வயது இரு சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.