சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று 08.03.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் அமைச்சின் உத்தியோக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்குகொண்டு இரத்ததானம் வழங்கினர்.