மாட்டு வண்டியில் மக்கள் பிரதிநிதிகள்!

0
255

நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டிலில் பிரதேச சபைக்குச் சமூகமளித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டிலில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பிரதேச சபை நோக்கி சென்றனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்று இடம்பெறும் நிலையில், மாதாந்த அமர்விற்கு மாட்டுவண்டியில் சென்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.