சுகாதார அமைச்சு கிராமப்புறங்களிலுள்ள மக்களின் பற் சுகாதாரத்தை மேற்படுத்தும் வகையில் பற்சிகிச்சை நிலையங்களை திறந்து வைக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டுவருகின்றது. அதனடிப்படையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் பற் சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.ஐ.எம்.றிபாஸ் கலந்து கொண்டு பற் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட பற்சிகிச்சை நிலையத்தினால் இப் பிரதேசத்தில் வாழுகின்ற பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் பயனடையவுள்ளார்கள்.
இதில் பிரதிப்பணிப்பாளர் ஏ.எம்.வாஜித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.மாஹீர் உட்பட வைத்தியர்கள், தாதிமார்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.