மட்டு.குருமண்வெளி அருள்மிரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவத் திருவிழா

0
139

மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளி அருள்மிரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவத் திருவிழா இடம்பெற்றது.

கடந்த 7ஆம் திகதி கிராம சாந்தியுடன் ஆரம்பமாகி 8ஆம் திகதி கொடியேற்றம், 14 ஆம் கதிகதி திருவேட்டைத் திருவிழா, தொடர்ந்து, 15ஆம் திகதி சப்புறத் திருவிழாவும் நடைபெற்று, இன்று 9ஆம் திருவிழா மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

வியாழ்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று, எதிர்வரும் சனிக்கிழமை பகல் அபிஷேகம நடைபெற்று அன்றிரவு வைரவர் நடைபெறும் பூசையைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான திருவிழா நிறைவுபெறவுள்ளது.

கிரியைகள் யாவும் தேசமானிய, ஆச்சாரிய திலகம் வே.குகேந்திர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றன.