பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடு யாழில் முன்னெடுப்பு!

0
181

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழுவின் ஏற்பாட்டில்
அனைவருக்கும் இனிமையான பயணம் எனும் தொனிப்பொருளில் பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான விழிப்புணர்வு செயற்பாடு யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது

அனைவருக்கும் இனிமையான பயணம் எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இக் நிகழ்வில் விருந்தினராக முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், முன்னாள் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான திருமதி. இமெல்டா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மற்றும் மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பேரூந்து செலுத்துநர்கள் நடத்துநர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

அனைவருக்கும் இனிமையான பயணம்” எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேரூந்துகளில்பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வில் பேரூந்துகளில் (பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வன்முறைகளை இல்லாதொழித்தல் தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தோடு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநி யோகிக்கப்பட்டது