கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடியதான நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு மாதகாலமாக ஏற்பட்டுவந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசை தற்பொழுது குறைந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக எரிபொருளை வைத்திருப்பவர்களை பொலிசார் கைது செய்யும் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், தற்பொழுது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடியதான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கொள்கலனுக்கு எரிபொருள் வழங்கப்படாமையாளும், இலகுவில் எரிபொருள் பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.