28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நண்பர்களோடு விளையாடிய சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு!

ஏழு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியிலுள்ள கிணறொன்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பற்ற நிலையிலிருந்த கிணற்றில் சிறுவன் வீழ்ந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், சிறுவன் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles