மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசேட உயிர்த்த ஞாயிறு திருப்பலி

0
115

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசேட உயிர்த்த ஞாயிறு திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இயேசுபிரான் மானிடர்களின் மீட்புக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்து உயிர்த்தெழுந்த இந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினமாக இன்று பாஸ்கா பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

பாஸ்கா பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று விசேட திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் .எஸ்.எல்.விஜேசேகர வழிகாட்டலின் மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கான விசேட பாஸ்கா திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.

சிறைச்சாலையில் நடைபெற்ற பாஸ்கா பண்டிகை விசேட திருப்பலியில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை கைதிகள் கலந்துகொண்டதுடன் திருப்பலியின் பின் ஆயர்
ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் அருட்தந்தையர்களினால் கைதிகளுக்கு பரிசில்கள் வழங்கி பாஸ்கா பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.