மண்ணெண்ணெய் பற்றாக்குறையால் மீன்பிடித்தொழில் பாதிப்பு

0
111

அம்பாறை மாவட்டம் – கல்முனை சாய்ந்தமருதுஇ மாளிகைக்காடுஇ காரைதீவு பிரதேசங்களில் சிறிய படகுகளின் மூலமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மண்ணெண்ணெய் பற்றாக்குறையால் சுமார் ஒரு மாதகாலமாக தொழிலில் ஈடுபட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாக மேற்படி பிரதேசங்களில் உள்ள சிறிய படகு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.


கல்முனைஇ சாய்ந்தமருதுஇ மாளிகைக்காடுஇ காரைதீவு பிரதேசங்களில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட சிறிய படகுகள் காணப்படுகின்றன. இப்படகுகளில் உள்ள இயந்திரங்கள் மண்ணெண்ணெய் மூலமாக இயங்குகிறது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிறிய படகு மூலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றே மண்ணெண்ணெய் வாங்க வேண்டிய நிலை. அது கூட 04 லீற்றர் அளவிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்கள். சிறிய படகுகளின் மூலமாக மீன்பிடிப்பதற்கு ஒரு நாளை சுமார் 15 லீற்றர் மண்ணெண்ணெய் தேவை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். டீசலில் இயங்குகின்ற பெரிய படகுகளுக்கு டீசலைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால்இ சிறிய படகுகளுக்குரிய மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கு எந்தவொரு பாஸ் கூட வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.


சுமார் 800 இற்கும் மேற்பட்ட சிறிய படகுகள் மூலமாக சுமார் 04 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டால் இக்குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால்இ தங்களுக்கு ஏனையவர்களுக்கு வழங்கியது போன்று போதியளவு மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்குரிய பாஸ் நடைமுறையை அறிமுகம் செய்யுமாறு அரசாங்கத்தையும்இ அதிகாரிகளையும் சிறிய படகு மீன்பிடித் தொழிலாளர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்