24 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog

கொரோனா தொற்றுடைய எவருமே கொழும்பில் இனம்காணப்படவில்லை

0

“மினுவாங்கொட கோரோனா பரவலையடுத்து கொரோனா தொற்றுள்ளோருடன் முதல்நிலைத் தொடர்புடையவர்களைக் கண்டறியும் செயற்பாடு நிறைவடைந்துள்ளது. எனினும் கொழும்பு மாவட்டத்தில் தொற்றுள்ள அல்லது சந்தேகத்துக்கு இடமான எவரும் இல்லை” என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சுதத் அமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மொனராகல, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்திலேயே கொரோனா பாதித்தோருடன் முதல்நிலைத் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலையடுத்து சுகாதாரத்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த முதல்நிலைத் தொடர்பாளர்கள் (தொற்றுள்ளவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்) அடையாளப்படுத்தலிலேயே இந்த முடிவு கிடைத்துள்ளது.
எனினும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொடர்புடையவர்களை அடையாளப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

0

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு மாகாண சுற்றுலா அலுவலக  நியதிச் சட்டம் மற்றும் வாழ்வாதார முகாமைத்துவ  நியதிச்
சட்டங்கள் என இரு நியதிச் சட்டங்களை வெளியீடு செய்து வர்த்தமானியில் பிரசுரித்திருந்தார்.

அவ்வாறு ஆளுநரால் நியதிச் சட்ட உருவாக்கம் செய்தமை சட்ட முரணனானது என வடக்கு மாகாண அவைத் தலைவர. சி.வி.கே.சிவஞானம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன ஊடாக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இருந்தபோதும் இதனை சட்டமா அதிபர் சார்பில் தெரிவித்தாளும் இவற்றை எழுத்தில் சமர்ப்பித்து நீதிமன்ற அனுமதியுடனேயே கட்டளை ஆக்குமாறு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சார்பில் கோரியதற்கமைய அதற்கு நியதிச் சட்டத்தை இரத்துச் செய்து நீதிமன்றிறகு அறிவிக்க  சந்தர்ப்பம் அளித்து மே மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இவ்வாறு தாக்கல் செய்த வழக்கில் 2022-10-27 அன்று வடக்கு ஆளுநரால்  வெளியிட்ட வாழ்வாதார முகாமைத்துவ முதலாம் இலக்க  நியதிச் சட்டம் மற்றும் 2ஆம் இலக்க சற்றுலா அலுவலக நியதிச் சட்டம் தொடர்பிலேயே சட்டமா அதிபர் சார்பில் மேற்கண்டவாறு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்யலாம எனக் கோரப்பட்டது.

கச்சதீவில் பாரிய பௌத்தவிகாரை!

0

கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பிடத்தக்கது 

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்க பட்டிருக்கிறது .

 ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தள்ளன.

அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.

“கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது,  பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும்,  இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

குறித்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் அங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலை எவ்வாறு கட்டப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அதனை நிறுவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் மத தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

0

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது.

தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயின் சடலத்தை பெறுவதற்காக போராடியுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி 54 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை அதிகாரியிடம் முதலில் திருமணம் செய்த மனைவி சாட்சி வழங்கும் போது இரண்டாவது மனைவி விஷம் கொடுத்தமையினால் கணவன் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தம்புத்தேகம பொலிஸார் தம்புத்தேகம நீதவானிடம் அறிக்கை செய்துள்ளனர். மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது மனைவி திருமணப் பதிவாளர் ஊடாக தனது திருமணத்தை நடத்தி வைத்ததாக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தம்புத்தேகம நீதவான் உத்தரவிற்கமைய, உயிரிழந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

0

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பல சதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தின் உதவியை நாடியபோது, உயர் நீதிமன்றம் அதை பரிசீலித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தாலும், அரசாங்கம் தனக்கு விசுவாசமான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இந்த முடிவை சவாலுக்குட்படுத்தியதாகவும், இதன் காரணமாக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நீதித்துறை, சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் பாரிய நெருக்கடி நிலை உருவாகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

சட்டவாக்கம் நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடுமையாக முயற்சிப்பதாகவும், இந்த முயற்சிகளை மிகவும் வெறுப்புடன் கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீதித்துறை உறுப்பினர்கள் அனைவரினதும் கண்ணியமான இருப்புக்காக எதிர்க்கட்சியாக முன்நிற்பதாகவும் அவர்தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிபதிகளை சங்கடப்படுத்துதல் அவமதிப்புகளுக்குட்படுத்துதல், வரப்பிரசாத குழுக்கு அழைத்து மானவங்கப்படுத்துவதன் மூலம், நீதிமன்றத்துறையில் தலையீடு செய்ய ஆயத்தமாகுவதாகும் எனவும், ஜனநாயகத்தைப் போற்றும் ஒரு மக்கள் பிரதிநிதியாக இதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சதிகளை முறியடிக்க இன, மத பேதமின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, அனைத்து அரசியல் சதிகளையும் கைவிட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறும், இல்லையெனில் சில தரப்புகள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடலாம் என்பதனால், நாட்டில் இவ்வாறான பாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

0

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் – இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தின்போது ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த பீடி இலைகள் சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் என்பனவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்கட்டணம் செலுத்தவில்லை: குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மின்சாரம் துண்டிப்பு!

0

மின்கட்டணம் செலுத்தாமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் இன்று துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் சேவையை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோதும், ​​மின்சார ச குழுவினர் வந்து அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

‘தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்களுக்குட்பட்டுவந்துள்ளேன்’ -நே.விமல்ராஜ்

0

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் சட்டத்திற்கு புறம்பான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தான் தொடர்ச்சியாக
பல்வேறு அழுத்தங்களுக்குட்பட்டுவந்ததாகவும் அதன் காரணமாகவே தனது பணி நிறுத்தமும் அமைந்துள்ளதாகவும் காணி ஆணைக்குழுவின்
மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் நே.விமல்ராஜ் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெறுவதே இலங்கையின் இலக்கு – தசுன் ஷானக்க

0

டெஸ்ட் விளையாடும் நாடு என்ற ரீதியில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெறுவதே  இலங்கையின்  இலக்கு என அணித் தலைவர் தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் ஓக்லண்ட், ஈடன் பார்க் அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தசுன் ஷானக்க இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறுவதற்கு நியூஸிலாந்துடனான ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் இலஙகை 3 – 0 என முழுமையாக வெற்றிபெறவேண்டும்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெற இத் தொடரில் இலங்கை முழுமையாக வெற்றிபெறவேண்டும். அது இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்குமா என கேட்க்கப்பட்டபோது,

‘எமக்கு அழுத்தும் எதுவுமே இல்லை. டெஸ்ட் விளையாடும் நாடு என்ற ரீதியில் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடி தகுதிபெறுவதே எமது இலக்கு. அந்த இலக்கை அடைவது சாத்தியம் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆனால், எல்லாம் அந்தந்த நாளில் வெளிப்படுத்தப்படும் ஆற்றல்களில்  தங்கியிருக்கிறது’ என அவர் கூறினார்.

‘இந்தத் தொடரை எதிர்கொள்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டுள்ளோம். சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் அணிக்கு திரும்பி இருப்பது இளம் வீரர்களுக்கு பெரும உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைகிறது’ என்றார்.

திறமையான வீரர்கள் சிலர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளதால் நியூஸிலாந்து அணியை இலகுவாக கருதுகிறீர்களா? என வினவப்பட்டபோது

‘நியூஸிலாந்து திறமை மிக்க அணியாகும். அவ்வணியை நாங்கள் இலகுவாக  எடுத்துக்கொள்ளமாட்டோம். தொடரை வெல்வதற்காக நாங்கள் கடுமையாக போட்டியிடவேண்டிவரும்’ என தசுன் ஷானக்க பதிலளித்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வி அடைந்தபோதிலும் இலங்கை கடுமையாக போட்டியிட்ட விதமானது இலங்கைக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற உதவும் என கருதப்படுகிறது.

முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன், தற்போதைய அணித் தலைவர் டிம் சௌதீ, டெவன் கொன்வே ஆகிய மூவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறாதது இலங்கைக்கு ஆறுதல் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டிம் சௌதீக்கு பதிலாக நியூஸிலாந்து அணித் தலைவராக டொம் லெதம் விளையாடவுள்ளார்.

இந்த வருட முற்பகுதியில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆரம்ப வீரராக அறிமுகமாகி அரைச் சதம் குவித்த நுவனிது பெர்னாண்டோ, முதலாவது போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் ஆரம்ப ஜோடியாக சேரவுள்ளார்.

அவர்களைத் தொடர்ந்து துடுப்பாட்ட வரிசையில் குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க, சுழல்பந்துவீச்சு சகலதுறைவீரர் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்ன அணியில் இடம்பெற்றால் துடுப்பாட்டம் மேலும் பலம் அடையும். அவர் விளையாடினால் லஹிரு குமார அல்லது கசுன் ராஜித்த ஆகிய இருவரில் ஒருவர் ஒதுங்க நேரிடும்.

சுழல்பந்துவீச்சாளராக பெரும்பாலும் மஹீஷ் தீக்ஷன இடம்பெறுவார். ஒருவேளை இன்னும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை அணியில் இணைக்க முகாமைத்துவம் தீர்மானித்தால் தீக்ஷன வெறும் பார்வையாளராக இருக்க நேரிடும்.

நியூஸிலாந்து அணியில் சாத் போவ்ஸ்,  ரச்சின் ரவிந்த்ர ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடுவர் என அறிவிக்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணி: பின் அலன், சாத் போவ்ஸ், வில் யங், டெரில் மிச்செல், டொம் லெதம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ர, ப்ளயார் டிக்னர் அல்லது பென் லிஸ்டர், ஹென்றி ஷிப்லி அல்லது லொக்கி பேர்கசன், மெட் ஹென்றி, இஷ் சோதி.

கட்டில் தடுப்பில் சிக்கி 7 மாதக் குழந்தை மரணம்!

0

ஊவாபரணகம, மஸ்பன்ன கிராமத்தில் கட்டிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த தடுப்பில் சிக்கி ஏழு மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்பன்ன வெலேக்கடே வீடொன்றில் வசித்து வந்த ஹர்ஷனி மதுஷிகா என்ற ஏழு மாத பெண் குழந்தையே படுக்கையில் இருந்து வீழ்ந்து தடுப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு அருகில் வந்து பார்த்தபோது, ​​கட்டிலைச் சுற்றியிருந்த தடுப்பில் குழந்தை மாட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையை மீட்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

‘நல்லிணக்கத்திற்கு முழுமையாக மாறான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது’-இரா.சாணக்கியன்

0

‘ஒருபுறம் சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை நாங்கள் சுபிட்சமான ஒரு நிலைக்கு கொண்டு செல்ல போகின்றோம் ‘ கூறிக்கொண்ட மறுபக்கம் நல்லிணக்கத்திற்கு முழுமையாக மாறான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கும் க.பொத. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் கீர்த்திவர்மன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
இரா.சாணங்கியன் ஆகியோருக்கு பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற 18 மாணவர்களுக்கு பணப்பரிசும், உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய 5 மாணவர்களுக்கு மடிக்கணினியும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்