32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog

ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே பொருத்தம்!-எம்.பிஹிருணிகா

0

கட்சிக்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே காலத்துக்கு பொருத்தமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றேன். காலையில் எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பவர்கள் மாலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசுகின்றனர்.


எனினும் இவ்வாறானவர்கள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனக்கு தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய ஆலோசனைக்கமைய நான் கட்சி செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.
எனவே கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை இவ்வாறு செயற்குழுவின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.


ஆனால் கட்சிக்குள் ஒருவரோரொடுவர் மோதிக் கொண்டிருக்காமல் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கான வியூகத்தை அனைவரும் இணைந்து வகுக்க வேண்டும்.
சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து தோற்கடிக்க வேண்டிய நபர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.


எனவே அதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.
அதனை விடுத்து கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டிருந்தால் அது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.


நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்து வைத்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு உடனுக்குடன் கோபம் வருவதைப் போன்று, அக்கோபம் மிக விரைவில் காணாமல் போய்விடும்.


எனவே அவர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
நேர்மையான அதிகாரியான அவர் வேறு எந்த தரப்புடனும் இணைய மாட்டார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் என ஹிருணிகா பிரேமசந்திர, தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தொடரும் துப்பாக்கி சூடு : இருவர் சுட்டுக்கொலை

0

கொழும்பின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 39 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை வத்தளை மஹாபாகே பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் பழி வாங்கும் நடவடிக்கை தீவரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சி.சிறீதரன்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 130 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 56 மேலதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று திருகோணமலையில் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்காக கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! (photos )

0

கிளிநொச்சியில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலை காரணமாக தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலர் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


ஒரு சிலர் எங்கு செல்வது என தெரியாமல் நிர்க்கதியான நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் தர்மபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைகளுக்குள் மழை நீர் உட்புகுந்தமையால் இன்று விடுமுறை வழங்கப்பட்டது.


பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக கிராம சேவையாளர் குறித்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசமே நீதியைத் தா, எங்கே எங்கள் உறவுகள்? கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் உறவினர்கள் போராட்டம்.(photos)

0

கிளிநொச்சி

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால், கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
சர்வதேச மனித உரிமைகள் தினமாக இன்றைய தினம், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் உறவினர்களால் கையளிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த இரண்டாயிரத்து 485 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா, எங்கே எங்கே உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், சர்வதேச மனித உரிமைகள் நாள் எமக்கு துக்க நாள் உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பி உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா – வேப்பங்குளத்தில் விபத்து : இருவர் வைத்தியசாலையில்.

0

வவுனியா – வேப்பங்குளத்தில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியா நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேப்பங்குளம் பகுதியில் நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் தொடர்பான மேலதிக விசாரணை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம்.

0

குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள எம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வருவதுடன், நீதி கேட்டு போராடி வருகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆண்டுகள் பல கடந்தாலும் நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களிற்கென நிதிகள் ஒதுக்கப்படுவதாக அறிகிறோம். நாங்கள் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம். எமக்கு நிதி தேவை இல்லை. நீதியே எமக்கு தேவை.

இந்த நிலையில், சில ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் எம்மால் சொல்லப்படாத விடயங்களை வெளியிடுகின்றனர். நிதியை எதிர்பார்த்து நிற்பதுபோல் எழுதுகின்றனர். நாங்கள் என்றும் நிதிக்காக போராடவில்லை. எமக்கு நீதியே தேவை.

இலங்கை அரசு நீதி தராது என்பதாலேயே நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம். எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம். அன்று நாங்கள் வடக்கு கிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிக குறுகிய 2 ஆண்டுகளிற்குள் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

நாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், கொடூர யுத்தத்தை முன்னெடுத்தார்கள் என்பதற்கும், காணாமல் ஆக்கச் செய்தார்கள் என்பதற்குமான பல சாட்சிகள் ஆதாரங்களுடன் உள்ள போதிலும் எமக்கு நீதி வழங்க எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை.

இலங்கை அரசும், சர்வதேசமும் நீதியை வழங்க முன்வரவில்லை. இந்த நிலையிலேயே நாங்கள் எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மாபெரும் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த போராட்டம் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எமது அலுவலகத்திற்கு முன்பாகவும் இடம்பெறும். குறித்த போராட்டத்திற்கு வர்த்தகர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒத்துழைத்து எம்முடைய போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வேகமாக மாறும் சர்வதேச அரசியல்.. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு!

0

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில்இ போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் கடந்த அக். 7ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அன்றைய தினம் இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது.

முதலில் சரமாரியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ்இ அதன் பிறகு இஸ்ரேலில் இறங்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியது. மேலும்இ இஸ்ரேலில் இருந்து பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

போர் நிறுத்தம்: இந்த திடீர் தாக்குதலால் முதலில் இஸ்ரேல் திணறினாலும் கூட அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்தது. கடந்த சில வாரங்களாகவே காசா பகுதியில் சரமாரியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. முதலில் காசா பகுதியின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல்இ அதன் பிறகு உள்ளே இறங்கியும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியது. குறிப்பாக காசாவின் சுரங்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும்இ காசா மருத்துவமனைகள் கீழே சுரங்கப்பாதைகள் இருப்பதாகச் சொல்லி அதன் மீதும் தாக்குதல் நடத்தியது.

பேச்சுவார்த்தை: இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆனது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில்இ போர் நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதையடுத்து கத்தார் மத்தியஸ்தனாம் செய்ய இஸ்ரேல் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையே முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் பேட்ஜ் பேட்ஜாக பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இஸ்ரேலும் தனது சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே போர்நிறுத்தம் அங்கு இருந்தது.

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தில் பெரிய வெள்ளி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.

0

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் பெரிய வெள்ளி தினம் இன்று மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலய பங்கு மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
சிவத்தபோக்கடி வேளாங்கன்னி மாதா ஆலயத்திலிருந்து ‘பாடுகளின் பாதையிலே எனும் கருப்பொருளில்
சிலுவைப் பாதை ஊர்வலம் இன்று காலை ஆரம்பமாகி ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடைந்தது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு அனுபவித்த துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் நினைவு கூரும் வகையில் மக்கள் ஊர்வலமாக சிலுவையினைச் சுமந்து சென்றதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
புனித சதா சகாய மாதா ஆலயத்தின் அருட்தந்தை ஜெரிஸ்டன் தலைமையில் இன்றைய வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

கலாச்சார பேரவை மற்றும் கலாச்சார அதிகார சபை 2024 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம்

0

கலாச்சார பேரவை மற்றும் கலாச்சார அதிகார சபை 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் இடம்பெற்ற பொது கூட்ட நிகழ்வில், கலாச்சார பேரவை உத்தியோகத்தர் வளர்மதி ராஜ், கலாச்சார அதிகரிச்சபை உத்தியோகத்தர்கள் ஆனேன் குமார் மற்றும் கலாசார பேரவை உறுப்பினர்கள் கலாச்சார அதிகாரிசபை உறுப்பினர்கள், கலை இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் என பலர் கலந்து கொண்டனர்
அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில் கலாச்சார பேரவை மற்றும் கலாச்சார அதிகார சபைகளின் மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதற்கான உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் காலங்களில் அரசினால் கொண்டு வரப்படுகின்றன சுற்று நிருபத்திற்கு அமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த செயல்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரிய வெள்ளி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது

0

இன்றைய தினம் பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் பெரியவெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருசிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் இன்றைய தினம் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன்
இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் அடையாளம் காணப்படாத வயோதிபர் ஒருவர் சடலம் மீட்பு

0

மட்டக்களப்பு பாலமீன்மடு மட்டிக்களி ஆற்றுப்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் அடையாளம் காணப்படாத வயோதிபர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீக்கப்பட்டுள்ள நபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரிய வெள்ளி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது

0

கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரிய வெள்ளி தினம் இன்றாகும். நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட நிகழ்வினை நினைவு கூறும் வகையில் இயேசு பிரானின் பாடுகளை குறிக்கும் பெரிய வெள்ளி தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும், திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன
மட்டக்களப்பு நகர் பகுதிகளில் உள்ள கிறித்தவ ஆலயங்களில் விசேட ஆராதனைகளும், இயேசு பிரானின் பாடுகளை குறிக்கும் திருச்சிலுவைப்பாதை பிரதான நிகழ்வுகளும் ஆலய அருட்தந்தையர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம், தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயம், இருதயபுரம் திரு இருதய நாதர் ஆலயம், கூளாவடி புனித அந்தோனியார் ஆலயம், புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயம், பெரிய உப்போடை தூய லூர்து அன்னை ஆலயம், அமிர்தகளி தூய கப்பலேந்தி அன்னை ஆலயம் ஆகிய ஆலயங்களில் திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகள் இடம்பெற்றன
இந்த புனித திருச்சிலுவைப்பாதையில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு

0

மட்டக்களப்பு காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினால் இன ஐக்கிய இப்தார் நிகழ்வு காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் நேற்று மாலை இடம்பெற்றது
இன ஐக்கிய இப்தார் நிகழ்வில் தமிழ், முஸ்லிம் பிரமுகர்களும் உலமாக்கள் முக்கிஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம் சாஜஹான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சர்வ மத முக்கியஸ்தர்களும் உலமாக்களும் உரையாற்றினர்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையே சந்திப்பு

0

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களை அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் களத்தில் கடமையாற்றும் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வேலை நாட்களில் தொடர்ச்சியாக கையொப்பமிடும் நடைமுறையை இல்லாமல் செய்தல் மற்றும் பிரிவு அலுவலகத்தை அரச மற்றும் தனியார் கட்டிடங்களை பிரிவு அலுவலகமாக பயன் படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு வாடகை பணத்தை பெற்றுக் கொடுத்தல் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சம்பளம் ஏற்றத்தின் நிலுவையை துரிதமாக வழங்கச் செய்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடினர்.
சந்திப்பில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் ரவி, செயலாளர் அன்வர் உட்பட அதன் பிரதிநிதிகளும் மாவட்ட சமுர்த்தி அலுவலகம் சார்பில் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி நிர்மலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

‘ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் நிறுத்துவது குறித்து தமிழ்மக்கள் சிறந்த முறையில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும்’

0

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் நிறுத்துவது குறித்து தமிழ்மக்கள் சிறந்த முறையில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் என்பது அவர்களிடம் இல்லையென எனவும் தெரிவித்துள்ளார்
நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா விஜயம்

0

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் உயர்தர சேவைகளை பாராட்டும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நேற்று நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இந்தியாவை சேர்ந்த சத்குரு ஸ்ரீ மதுசன் சாய் அவர்களது ஏற்பாட்டில் செயலாற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் பொது வைத்திய நிபுணருமான டாக்டர் சுந்தரேசன், மற்றும் இந்தியாவை சேர்ந்த வைத்தியர் ரமேஷ் ராவ் தலைமையிலான குழுவினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருத நோய் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்கள் ஊழியர்களுடன் இணைந்து பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி எனும் அடிப்படையிலும் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்
இதன்போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சுந்தரேசன் , பணிப்பாளர் டாக்டர் ரமேஷ் ராவ், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் அஸ்மி, வைத்தியசாலையின் நிருவாக அதிகாரி பிரதீபன், கதிரியல் பிரிவு உத்தியோகத்தர் இக்ராம், உட்பட வைத்தியசாலையின் தாதியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அரசியலுக்கப்பால்?

0

நாம் தொடர்ந்தும் அரசியல் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றோம். ‘ஈழநாடு’ ஆசிரியர் தலையங்கத்தை உற்றுநோக்கிவரும் பலரும் அரசியலுக்கு அப்பாலான விடயங்களிலும் ‘ஈழநாடு’ அதன் அவதானத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
அவர்களின் கவலைகளை நாம் விளங்கிக் கொள்கின்றோம்.
அரசியல் அதிகாரமின்றி ஒரு சமூகம் அதன் சமூக, பொருளாதார கட்டமைப்புகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது. இந்த அடிப்படையிலேயே அரசியல்மீது பிரதான கவனத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது.
அதற்காக ஏனைய விடயங்கள் பற்றி அக்கறை கொள்ளக்கூடாது என்பதல்ல பொருள். ஆனால், நமது அரசியல்வாதிகளை நோக்கி இவ்வாறான விடயங்களை பற்றிப் பேசுவதில் என்ன பொருள் உண்டு என்னும் கேள்வி உண்டு.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் ஒரு எல்லைக்கு மேல் அதனால் விடயங்களை முன்னெடுக்க முடியாத நிலையிருக்கின்றது. எனவே, அரசாங்கத்தை நோக்கி கோரிக்கைகளை முன்வைப்பதில் எவ்வித பயனுமில்லை.
இந்த நிலையில், வடக்கு – கிழக்கில் தமிழ் சமூகம் தொடர்ந்தும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையை நோக்கியே சரிந்து கொண்டிருக்கின்றது. ஓரளவு புலம்பெயர் சமூகத்தில் உள்ளவர்களின் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கின்றன. குறிப்பாக, பின்தங்கிய பகுதிகளில் மாணவர்களின் கல்வி நிலையோ மிகவும் மோசமான நிலையிலிருக்கின்றது. இந்த விடயத்தில், முன்னேறிய தமிழ் சமூகம் வடக்கு – கிழக்கின் பின்தங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தங்களுடைய உதவிகளை கல்வி மேம்பாட்டை நோக்கி குவிப்பதற்கு முன்வர வேண்டும்.
இல்லாவிட்டால், அரசியல் அதிகாரம் ஒரு காலத்தில் கிடைத்தால்கூட அதனை பயன்படுத்துவதற்கும் – வழிநடத்துவதற்கும் நம்மிடம் ஆளுமையுள்ள ஒரு தலைமுறை இருக்காது. வசதியுள்ள தமிழ் மத்தியதர வர்க்கம் வெளிநாடுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
வசதியில்லாத ஒரு மக்கள் கூட்டமே தேசியத்தின் பெயரால் மிஞ்சப்போகின்றது. இந்த நிலையில் வெளியேறுபவர்களைப் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை – அவர்கள் வெளியேறத்தான் போகின்றனர். ஒருவேளை கனடா இந்த வீசா நடைமுறையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால் இன்னும் ஐந்து வருடங்களில் இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறிவிடுவர்.
இந்த நிலையில் வசதியுள்ள புலம்பெயர் சமூகத்தின் மூத்த தலைமுறை – இதேவேளை, தாயக ஏழை மக்களின் நலனில் அக்கறையுள்ள புலம்பெயர் அமைப்புகள் தனிநபர்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் பின்தங்கிய பகுதிகளை அடையாளம் கண்டு அங்குள்ள பாடசாலைகளில் கல்விக்கான வசதி வாய்ப்புகளை
பெருக்குவதற்கு உதவி செய்ய முன்வரவேண்டும்.
உள்ளூர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் இணைந்து இவ்வாறான பகுதிகளையும் அங்குள்ள பிரச்னைகளையும் முதலில் அடையாளம் காண வேண்டும். தாயக கல்வி மேம்பாட்டுக்கான நிதி என்னும் ஒரு நிதியத்தை புலம்பெயர் சூழலில் உருவாக்க வேண்டும். இதில், அரசியல் தேவையற்றது. அனைவரின் உதவியுடனும் இதனை முன்னெடுக்கலாம்.
வெறும் தேசிய சுலோகங்கள் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு பயன்படாது. கல்வியை இழந்தால் – பின்னர் தமிழ் சமூகம் இறுதியில் அனைத்தையும் இழந்துவிடும்.