31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog

От Звезды Баскетбола До Бизнес Могула Путь Надежды Гришаевой

0

История успеха Anvil: путь Надежды Гришаевой к процветанию

Покинув мир профессионального баскетбола, Надежда Гришаева занялась предпринимательством и основала Anvil – современный спортивный комплекс, который пересматривает стандарты фитнеса. За короткий срок Anvil стал главным выбором для любителей фитнеса, предлагая индивидуальные услуги для улучшения общего самочувствия.

Помогая спортсменам добиться успеха в бизнесе

Взявшись за новое и передовое дело, Надежда преодолела трудности и основала клуб "Anvil". Несмотря на трудности, возникшие после серьезной баскетбольной травмы, она превратила свою любовь к движению в новые возможности. Представляя оптимизм и омоложение в сфере Надежды, клуб "Anvil" родился из трудностей.

Современный подход к здоровому образу жизни

Отличаясь от обычных фитнес-залов, тренажерный зал Anvil воплощает в себе прогрессивный взгляд Надежды на здоровье и хорошее самочувствие. Он пропагандирует целостный подход к хорошему самочувствию с помощью индивидуальных тренировок и диетических рекомендаций. Видение Надежды Гришаевой выходит за рамки физического здоровья, подчеркивая важность психической устойчивости и эмоционального равновесия.

Удовлетворение разнообразных потребностей поклонников фитнеса

В Anvil мы стремимся поддерживать разнообразие и инклюзивность в фитнес-сообществе. Надежда ценит индивидуальные сильные стороны каждого человека и работает над созданием благоприятной и инклюзивной среды.

Ведущая роль в трансформации здоровья и фитнеса

Начиная с третьего года работы, Anvil стремится совершить революцию в индустрии здоровья и велнеса, предлагая инновационные решения. Гришаева является пионером в области интеграции передовых технологий и революционных методов восстановления, чтобы установить новый стандарт совершенства в фитнесе.

Подход Anvil: Философия комплексного оздоровления

Чувствуете, что застряли в одной и той же старой рутине упражнений? Загляните в ультрасовременный фитнес-центр Anvil. Приготовьтесь к уникальному, омолаживающему опыту, который освежит ваше тело, разум и душу. Узнайте, что отличает этот фитнес-центр:

Откройте для себя разнообразие вариантов фитнеса

В заведении Надежды Гришаевой вы получите доступ к широкому спектру фитнес-упражнений, направленных на улучшение общего самочувствия: от силовых и кардиотренировок до упражнений на гибкость. Вы даже можете выбрать индивидуальный фитнес-план, который поможет вам достичь поставленных целей и повысить работоспособность.

Зарядите свое тело для приключений

Ценя значение сбалансированного питания для достижения ваших целей, Anvil стремится создавать индивидуальные планы питания и предлагает профессиональные консультации по питанию. Эти компоненты имеют решающее значение для оказания помощи людям на их фитнес-пути и обеспечения оптимальных результатов.

Восстановите силы и расслабьтесь

Надежда Гришаева повышает уровень работоспособности в нашем заведении, внедряя инновационные методы отдыха и омоложения. Наши клиенты могут насладиться такими восстанавливающими процедурами, как криотерапия и успокаивающие массажи, призванные снять мышечное напряжение и расслабиться после напряженных тренировок.

Отправляйтесь в кулинарное приключение, чтобы достичь успеха

Совершите уникальное кулинарное путешествие в кафе Anvil, где наше тщательно разработанное меню призвано порадовать ваш вкус и напитать ваше тело. Созданные командой специалистов по питанию, наши блюда предлагают идеальное сочетание вкуса и необходимых питательных веществ, чтобы вы чувствовали себя довольными и энергичными.

Побалуйте себя исключительными спа-услугами

Побалуйте себя роскошными и восстанавливающими процедурами в нашем роскошном спа-салоне, где предлагаются разнообразные процедуры премиум-класса, способствующие расслаблению и общему хорошему самочувствию. Ищете ли вы успокаивающий массаж или омолаживающую процедуру для лица, погрузитесь в мир чистого спокойствия и омоложения в спа-салоне Надежды Гришаевой – тихой гавани для обновления.

С теплыми пожеланиями и благодарностью от Надежды Гришаевой

Празднование трех лет достижений и признания в Anvil Gym

Отмечая трехлетние достижения, Надежда, движущая сила Anvil Gym, выражает искреннюю благодарность преданным тренерам, команде и членам клуба, которые сыграли важную роль в достижении этой важной вехи. Вместе они создали живое сообщество, ориентированное на укрепление здоровья и физического благополучия.

Начните свое фитнес-приключение в тренажерном зале Anvil

Откройте для себя инклюзивную и динамичную атмосферу фитнеса в Anvil Gym! Присоединяйтесь к нам, чтобы улучшить свою физическую форму или начать новое путешествие к здоровому образу жизни. Примите участие в нашем сообществе поддержки и начните свой путь к успеху и расширению возможностей вместе с Надеждой и всей семьей тренажерного зала.

Начиная с третьего года работы, Anvil Gym с воодушевлением и оптимизмом смотрит в будущее. Созданный Гришаевой, этот фитнес-центр зарекомендовал себя как лидер в своей области. Начав скромно, компания заслужила похвалу за воплощение таких ключевых ценностей, как настойчивость, креативность и постоянное внимание к общему благополучию. В будущем тренажерный зал "Надежда" стремится мотивировать людей к раскрытию своей внутренней силы и принятию образа жизни, характеризующегося жизненной силой, устойчивостью и позитивными изменениями.

Стратегии онлайн казино

0

Эффективные методы и тактики игры в интернет-казино

Когда речь заходит о достижении успеха в залах азартных развлечений в интернете, существует несколько умелых приемов, которые могут существенно повлиять на вашу игровую стратегию. Игра в такие заведения требует не только удачи, но и стратегического подхода, gama casino вход который основан на анализе данных, знании психологии игры и четком планировании.

Изучение вероятностей игровых событий является одним из ключевых аспектов успешной игры в цифровые клубы. Независимо от выбранного вами развлечения, понимание вероятностей выигрыша позволяет более осознанно подходить к размещению ставок и управлению банкроллом. В этом контексте каждое решение имеет важное значение, и тщательное изучение вероятностей помогает игроку принимать более обоснованные решения.

Осознание психологических аспектов игры также неотъемлемая часть успешной стратегии виртуального азарта. Психология игрового процесса оказывает влияние на принятие решений, поэтому понимание своих эмоциональных реакций и умение контролировать их помогает избежать необдуманных действий, которые могут привести к потере банкролла.

Планирование игровой сессии играет ключевую роль в успехе каждого азартного энтузиаста. Эффективная стратегия включает в себя не только выбор игр и ставок, но и разработку плана действий, который помогает соблюдать дисциплину и контролировать результаты. Планирование также способствует оптимизации времени и ресурсов, что значительно увеличивает шансы на положительный исход игровой сессии.

Основные подходы для достижения успеха в игровых заведениях в сети

Основные принципы для достижения благоприятных исходов

Принцип

Описание

Управление капиталомОптимизация вложений и контроль рисков – ключ к стабильности финансового положения в процессе игры.
Изучение правилПонимание установок и механизмов каждой игры увеличивает вероятность благоприятных результатов в долгосрочной перспективе.
СамодисциплинаУмение контролировать свои эмоции и предотвращать спонтанные решения способствует сохранению баланса и улучшению игровой стратегии.
Практика и анализРегулярное обучение и оценка своих действий позволяют совершенствовать навыки и углублять понимание игровых сценариев.

При выборе подхода к игровым площадкам в сети, обращение внимания на перечисленные аспекты способствует формированию стратегического преимущества и укреплению финансового благополучия. Внимательность к деталям и последовательное выполнение планов помогают обеспечить стабильность и успех в сфере виртуального азарта.

Эффективные подходы для увеличения вероятности успешного исхода

В данном разделе мы рассмотрим основные методы, которые способствуют повышению шансов на получение положительного результата в игровой среде. Исследование показывает, что определенные подходы могут существенно увеличить вероятность выигрыша, несмотря на случайный характер многих аспектов игры.

Анализ возможностей играет важную роль в определении эффективных стратегий. Вместо применения рискованных подходов, которые могут не оправдаться, участники могут использовать аналитику и разведывательный подход для достижения более благоприятных результатов.

Оптимизация тактики также имеет значение. Это включает в себя не только выбор игр, где вероятность выигрыша выше, но и управление финансами, что позволяет увеличить долгосрочные перспективы. Мастерство и уточнение подходов к игре могут значительно повысить вероятность достижения желаемого результата.

Исследование этих методов показывает, что эффективные стратегии могут значительно повысить вероятность успеха в условиях, где каждый ход имеет значение для конечного итога. Понимание и применение подобных подходов могут сделать игровой процесс не только увлекательным, но и успешным.

இரணைமடுக்குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்

0

கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் பொன சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருமுறிகண்டி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுவனே காணாமல் போயுள்ளார்.

4 சிறுவர்கள் சேர்ந்து நீராடச் சென்ற நிலையில் குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளார். 5 மணி;தியாலங்களுக்கும் மேலாக அவரைத் தேடும் பணியில் மீனவர்கள் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த பொலிஸாரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியுள்ளனர்.

Онлайн казино pin up играть бесплатно

0

“Откройте мир Pin Up – играйте бесплатно в онлайн казино!”

Платформа, гама казино официальный сайт (mahanteshunited.com) объединяющая в себе множество развлекательных возможностей, предлагает уникальный опыт, доступный каждому желающему испытать удачу в азартных играх. Здесь вы найдете ассортимент, который удовлетворит любой вкус и предпочтение, от классических азартных игр до инновационных развлечений, где каждая партия становится увлекательным приключением. На платформе Pin Up представлены игры, способные захватить вас своими непредсказуемыми сюжетами и возможностями для победы.

Здесь весьма популярны не только традиционные азартные развлечения, но и новинки, которые подарят вам уникальные впечатления и могут стать отличным способом расслабиться после трудового дня или насытить свободное время яркими впечатлениями. Этот игровой портал обеспечивает возможность наслаждаться азартом без финансовых рисков, предлагая широкий выбор демо-версий для тех, кто хочет испытать игровой процесс перед вложением реальных средств.

Насладитесь азартом и великолепной атмосферой на платформе, которая считается одной из наиболее популярных среди ценителей азартных игр. Pin Up – это не просто игровой ресурс, а уникальная возможность окунуться в мир азарта и адреналина, где каждая минута может принести волнующие эмоции и неожиданные призы.

Популярность интернет-площадки Pin Up

Ресурс, который мы рассматриваем, находится в центре повышенного внимания пользователей. Он завоевал признание благодаря своей удобной структуре и широкому выбору развлечений, предоставляемых на его страницах.

Во-первых, этот портал оценивают за его привлекательный дизайн и интуитивно понятный интерфейс. Пользователи высоко оценивают удобство навигации и возможность безопасно и комфортно проводить время, наслаждаясь азартными играми и другими развлечениями.

Во-вторых, ресурс заслужил репутацию надежного провайдера игровых услуг благодаря строгим стандартам безопасности и качественному обслуживанию клиентов. Все это вместе образует положительное впечатление о площадке и стимулирует пользователей возвращаться снова и снова.

Кроме того, Pin Up славится разнообразием игровых возможностей, включая широкий спектр азартных игр, турниры и специальные предложения. Это делает его привлекательным выбором для тех, кто ищет разнообразие и хочет наслаждаться играми на любой вкус и предпочтение.

Наконец, позитивные отзывы пользователей и активные обсуждения на различных игровых форумах подчеркивают растущую популярность Pin Up среди любителей азартных развлечений. Это подтверждает его статус одной из лучших платформ в отрасли, где каждый может найти что-то для себя.

Бесплатные возможности для игры и их привилегии

Преимущества бесплатных игровых возможностей подчеркивают их ценность для улучшения навыков и для чистого развлечения. Они обеспечивают безопасное окружение для тестирования новых подходов и углубленного изучения правил игр. Это также способствует укреплению уверенности в собственных силах, что особенно важно при переходе к реальным ставкам и игровому опыту. Бесплатные возможности для игры поддерживают равенство шансов и способствуют расширению кругозора в азартной деятельности.

Попробуйте сами и убедитесь в преимуществах бесплатных игровых возможностей, которые открывают перед вами мир азартных игр!

கால நிலையில் ஏற்ப்பட்ட மாற்றம்- மக்களுக்கு விடுக்கபட்ட எச்சரிக்ககை

0

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலியில் இருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான காலப்பகுதியில் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்  அதிகபட்சமாக 75 மி.மீ. அளவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில்  பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகரிக்கும்.

போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெளியில் கடுமையான உழைப்பைக் குறைத்தல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாரடைப்பால் அதிகரிக்கும் மரணங்கள் :வைத்தியர்கள் விடுத்த எச்சரிக்ககை

0

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் அலுவலகத்தின் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் இது தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார்.

“இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. இதை மாரடைப்பு அல்லது ஹாட் ஹெட்டக் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன. முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணனிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளதாக வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.

“குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் டி.வி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள்.மேலும் வயது வரம்பு இல்லாமல் மொபைல் போன்களுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும், என்றார்.
 

பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) – இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கமானது பப்புவா நியூ கினியாவின் (Papua New Guinea) வடக்கு பகுதியில் இன்று (15.4.2024) காலை 6.56 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில், 64 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

எனினும், இதனால் சுனாமி (Tsunami) எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட ரிக்டரில் 6.9 அளவிலான நிலநடுக்கத்தால் 5 பேர் வரை உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை இழந்ததுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே பொருத்தம்!-எம்.பிஹிருணிகா

0

கட்சிக்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே காலத்துக்கு பொருத்தமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றேன். காலையில் எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பவர்கள் மாலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசுகின்றனர்.


எனினும் இவ்வாறானவர்கள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனக்கு தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய ஆலோசனைக்கமைய நான் கட்சி செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.
எனவே கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை இவ்வாறு செயற்குழுவின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.


ஆனால் கட்சிக்குள் ஒருவரோரொடுவர் மோதிக் கொண்டிருக்காமல் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கான வியூகத்தை அனைவரும் இணைந்து வகுக்க வேண்டும்.
சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து தோற்கடிக்க வேண்டிய நபர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.


எனவே அதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.
அதனை விடுத்து கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டிருந்தால் அது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.


நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்து வைத்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு உடனுக்குடன் கோபம் வருவதைப் போன்று, அக்கோபம் மிக விரைவில் காணாமல் போய்விடும்.


எனவே அவர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
நேர்மையான அதிகாரியான அவர் வேறு எந்த தரப்புடனும் இணைய மாட்டார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் என ஹிருணிகா பிரேமசந்திர, தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தொடரும் துப்பாக்கி சூடு : இருவர் சுட்டுக்கொலை

0

கொழும்பின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம எப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 39 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை வத்தளை மஹாபாகே பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு இடையில் பழி வாங்கும் நடவடிக்கை தீவரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சி.சிறீதரன்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 186 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 130 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் 56 மேலதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று திருகோணமலையில் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்காக கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கடும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! (photos )

0

கிளிநொச்சியில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலை காரணமாக தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலர் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


ஒரு சிலர் எங்கு செல்வது என தெரியாமல் நிர்க்கதியான நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் தர்மபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைகளுக்குள் மழை நீர் உட்புகுந்தமையால் இன்று விடுமுறை வழங்கப்பட்டது.


பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக கிராம சேவையாளர் குறித்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசமே நீதியைத் தா, எங்கே எங்கள் உறவுகள்? கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் உறவினர்கள் போராட்டம்.(photos)

0

கிளிநொச்சி

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால், கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
சர்வதேச மனித உரிமைகள் தினமாக இன்றைய தினம், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் உறவினர்களால் கையளிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த இரண்டாயிரத்து 485 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா, எங்கே எங்கே உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், சர்வதேச மனித உரிமைகள் நாள் எமக்கு துக்க நாள் உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பி உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா – வேப்பங்குளத்தில் விபத்து : இருவர் வைத்தியசாலையில்.

0

வவுனியா – வேப்பங்குளத்தில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியா நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேப்பங்குளம் பகுதியில் நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் தொடர்பான மேலதிக விசாரணை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம்.

0

குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள எம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வருவதுடன், நீதி கேட்டு போராடி வருகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆண்டுகள் பல கடந்தாலும் நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களிற்கென நிதிகள் ஒதுக்கப்படுவதாக அறிகிறோம். நாங்கள் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம். எமக்கு நிதி தேவை இல்லை. நீதியே எமக்கு தேவை.

இந்த நிலையில், சில ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் எம்மால் சொல்லப்படாத விடயங்களை வெளியிடுகின்றனர். நிதியை எதிர்பார்த்து நிற்பதுபோல் எழுதுகின்றனர். நாங்கள் என்றும் நிதிக்காக போராடவில்லை. எமக்கு நீதியே தேவை.

இலங்கை அரசு நீதி தராது என்பதாலேயே நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம். எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம். அன்று நாங்கள் வடக்கு கிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிக குறுகிய 2 ஆண்டுகளிற்குள் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

நாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், கொடூர யுத்தத்தை முன்னெடுத்தார்கள் என்பதற்கும், காணாமல் ஆக்கச் செய்தார்கள் என்பதற்குமான பல சாட்சிகள் ஆதாரங்களுடன் உள்ள போதிலும் எமக்கு நீதி வழங்க எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை.

இலங்கை அரசும், சர்வதேசமும் நீதியை வழங்க முன்வரவில்லை. இந்த நிலையிலேயே நாங்கள் எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மாபெரும் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த போராட்டம் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எமது அலுவலகத்திற்கு முன்பாகவும் இடம்பெறும். குறித்த போராட்டத்திற்கு வர்த்தகர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒத்துழைத்து எம்முடைய போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வேகமாக மாறும் சர்வதேச அரசியல்.. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு!

0

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில்இ போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் கடந்த அக். 7ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அன்றைய தினம் இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது.

முதலில் சரமாரியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ்இ அதன் பிறகு இஸ்ரேலில் இறங்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியது. மேலும்இ இஸ்ரேலில் இருந்து பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

போர் நிறுத்தம்: இந்த திடீர் தாக்குதலால் முதலில் இஸ்ரேல் திணறினாலும் கூட அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்தது. கடந்த சில வாரங்களாகவே காசா பகுதியில் சரமாரியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. முதலில் காசா பகுதியின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல்இ அதன் பிறகு உள்ளே இறங்கியும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியது. குறிப்பாக காசாவின் சுரங்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும்இ காசா மருத்துவமனைகள் கீழே சுரங்கப்பாதைகள் இருப்பதாகச் சொல்லி அதன் மீதும் தாக்குதல் நடத்தியது.

பேச்சுவார்த்தை: இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆனது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில்இ போர் நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதையடுத்து கத்தார் மத்தியஸ்தனாம் செய்ய இஸ்ரேல் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையே முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் பேட்ஜ் பேட்ஜாக பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இஸ்ரேலும் தனது சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே போர்நிறுத்தம் அங்கு இருந்தது.

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

0

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார  புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் வந்திறங்கிய மைத்திரி !

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று(26) அத்துருகிரியவில் உள்ள விஜேதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்தார்.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டபோது, ​​தேர்தல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களை பயன்படுத்தாது முச்சக்கரவண்டியில் வந்ததாக அவர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் – இரு சந்தேகநபர்கள் கைது

0
கறுவாத் தோட்டம் வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கிராண்ட்பாஸ் – சமகி மாவத்தை பகுதியில் நேற்று முன்னெடுத்த சோதனையின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் 35 மற்றும் 48 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜீப் ரக வாகனம் மோதி ஒருவர் பலி

0
நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் ரக வாகனமொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 47 வயதுடைய ஆண் ஒருவரே பலியானதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்துடன் தொடர்புடைய சாரதி நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச்சடங்கு இன்று

0
மறைந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.இறுதி கிரியை பொரளை பொது மயானத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் இன்றும், காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.உடல் நலக்குறைவு காரணமாக நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கடந்த 24ஆம் திகதி காலமானார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி

0
மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.#

தம்புள்ளையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதினபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.இந்த நிலையில் 141 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்ததுதுடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 2024ஆம் ஆண்டுக்கான மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

90% மருந்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை

0
Illustration photo shows various medicine pills in their original packaging in Brussels, Belgium August 9, 2019. REUTERS/Yves Herman/Illustration
நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை எதிர்வரும் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பயன்படுத்தப்படும் 200இற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொகை மொத்த மருந்து தேவையில் 25 சதவீதமாகும்.
இதற்கிடையில் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் ரி20 சர்வதேச தொடர் இன்று ஆரம்பம்

0
Rohit Sharma (c) of India and Shubman Gill of India during the first one day international match between India and Sri Lanka held at the Barsapara Cricket Stadium, Guwahati on the 10th January 2023Photo by: Saikat Das / SPORTZPICS for BCCI

சூர்யகுமார் தலைமையிலான சுற்றுலா இந்திய மற்றும் சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடர் இன்று பல்லேகலையில் ஆரம்பமாகிறது.

இலங்கைக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுத்தொடர் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் வீதம் கொண்ட ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளனர். இந்நிலையில் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் இன்று ஆரம்பமாகிறது. இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது போட்டி செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.

இலங்கை அணி ரி20 உலகக்கிண்ண தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய நிலையில் தற்போது புதிய தலைமையான அசலங்க மற்றும் புதிய உள்ளக பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய ஆகியோருடன் களமிறங்குகிறது. அதேபோன்று ரி20 உலக சம்பியனான இந்திய அணியும் தற்போது புதிய தலைமை சூர்யகுமார் யாதவ், புதிய பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் ஆகியோருடன் களமிறங்குகிறது.

 கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் 29 ரி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 19 போட்டிகளிலும், இலங்கை அணி வெறும் 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன. இரு அணிகளும் இறுதியாக கடந்த 2023 ஜனவரியில் மோதியிருந்தன. அதன் பின் ஒன்றரை ஆண்டுகளின் பின் இரு அணிகளும் ரி20யில் சந்திக்கின்றன.

இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற 5 போட்டிகள் தொடர்பில் அவதானம் செலுத்துகின்ற போது இந்திய அணி 3 போட்டிகளிலும், இலங்கை அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கின்றன.

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் இதுவரையில் 10 இருதரப்பு ரி20 சர்வதேச தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 8 தொடர்களை வென்று அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கை அணி கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியாக தொடரை இந்தியாவுடன் 2-1 என வென்றிருந்தது. இலங்கை அணி இறுதியாக கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஆடி 1-2 என தொடரை பறிகொடுத்திருந்தது.

இலங்கை ரி20 அணி தற்போது புதிய தலைமையுடன் களமிறங்குகிறது. ரி20 உலகக்கிண்ணத்தில் முதல் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து தலைவராக செயற்பட்ட வனிந்து ஹஸரங்க மீது அழுத்தங்கள் ஏற்பட்டதன் காரணமாக அவர் தலைமை பதவியிலிருந்து விலகி தான் வீரராக அணியில் தொடர்ந்து என்னால் முடிந்த அளவுக்கு வீரராக பிரகாசிப்பேன் என தெரிவித்திருந்தார்.

இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர்களான துஸ்மந்த சமீர (உடல் சுகயீனமின்மை) மற்றும் நுவான் துஷார (பயிற்சியின் போது விரல் உபாதை) ஆகியோர் இலங்கை குழாமிலிருந்து அடுத்தடுத்து வெளியேற, வேகப்பந்துவீச்சாளர்களான அசித்த பெர்ணான்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி ரி20 உலக சம்பியனாக வலம்வருவதுடன், இலங்கை அணியுடன் அண்மைக்காலங்களில் பல சாதனை வெற்றிகளையும் குவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லி, ரோஹிட் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் பல இளம் வீரர்களுடன் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் கடந்த வாரம் நிறைவுக்குவந்த எல்.பி.எல் தொடரில் பிரகாசித்த வீரர்களை கொண்டு இலங்கை அணி இந்தியாi எதிர்கொள்கிறது.

வாக்காளர்களுக்கான புதிய சலுகை

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர மாற்று வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியுமெனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு கோரலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த மாதம் 1ஆம் திகதி அல்லது அதற்கு முன், தேர்தல் ஆணைக்குழுவிற்கு படிவங்களை அனுப்ப வேண்டும்.

மேலும், ஒவ்வொரு விண்ணப்பமும் விண்ணப்பதாரரின் குடியிருப்புப் பகுதி கிராம அதிகாரிகளால் சான்றளிக்கப்பட வேண்டும், இல்லையெனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை

0

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும்  கொந்தளிப்பாகக் காணப்படும்.

திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.