அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்கவேண்டும்:இரா.துரைரெத்தினம்

0
500

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண உதவித் தொகையால் அரசாங்க அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் 5000 ரூபாய் நிதி அனைவருக்கும் வழங்க வேண்டுமென்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் உதவ வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இன்று மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.