அம்பாரை பொது வைத்தியசாலையின்
ஏற்பாட்டில் சைக்கள் சவாரி முன்னெடுப்பு

0
158

அம்பாரை பொது வைத்தியசாலையின் ஒழுங்கமைப்பினால் ஆறாவது தடவையாகவும் தொற்றா நோய்களை தடுப்பதற்காக பொது மக்களை விழிப்பூட்டும் வகையில் சைக்கில் சவாரி அம்பாரையில் இருந்து அறுகம்பை வரை முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இவ் சைக்கில் சவாரியானது அம்பாரை பொது வைத்தியசாலையில் பணிப்பாளர் உப்புல் விஜயநாயக்கா அவர்களின் தலைமையிலான சைக்கில் சவாரி அம்பாரை பொது வைத்தியசாலையில் இருந்து இன்று காலை ஆரம்பமாகி இருந்தது

தொற்றா நோய்களை தடுத்து ஆரோக்கியமான வாழ்கையை முன்னெடுப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி என்பதனை மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கில் ஆறாவது தடவையாகவும் அம்பாரை பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் இவ் சைக்கில் சவாரி முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன.

இவ் சைக்கில் சவாரியானது அம்பாரை பொது வைத்தியசாலையில் இருந்து இன்று காலை அரம்பமாகி இருந்ததுடன் அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் ஊடாக அறுகம்பை வரை முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இவ் சைக்கில் சவாரியில் பங்கு கொண்டவர்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் காஞ்சிரம்குடா இராணுவ முகாம் படையினரின் ஒத்துழைப்புடன் இளநீர் வழங்கி அவர்களை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அவர்கள் வரவேற்று இருந்தார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளை தளபதி அம்பாரை சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தம்பிலுவில் குருகுலப் பணிப்பாளர் காஞ்சிரம்குடா இராணுவ முகாம் படையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.