அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்று
வழங்கினார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் மற்றும் கல்விச்சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய ஜக்கியமக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கல்வி ஊழியர் சங்கத்தினுடைய இணைப்புச் செயலாளருமான வெ.வினோகாந்தின் சிபாரிசுக்கு அமைய வழங்கிவைத்தார்.
அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை முன்பாக இருந்து பஸ் வண்டியினை செலுத்திவந்த சஜித் பிரேமதாச பிரதானவீதிகளினூடாக பாடசாலையினை அடைந்தார்.
சம்பிரதாயபூர்வமாக பஸ் வண்டியின் திறவுகோலை மாணவர்களிடம் கையளித்தார்.
பாடசாலை அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களினால் சஜித் பிரேமதாச நினைவுச்சின்னம் வழங்கிபொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் பிரதேச செயலாளர் பபாகரன், வலயக்கல்விப்பணிப்பாளர் உதயகுமார், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் அகிலன், ஜக்கியமக்கள் சக்தியின் அம்பாரைமாவட்ட இணைப்பாளரும் கல்வி ஊழியர் சங்கத்தினுடைய இணைப்புச் செயலாளருமான வினோகாந்த் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.