அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் முனையூர் கிராமத்தில் நிரந்தர வீடு இல்லாது வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்
பீடத்தினால் புதிய வீடு ஒன்று நிர்மாணித்துக் கையளிக்கப்பட்டது.
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மாவட்ட செயற்பாட்டாளர் கிருஸ்ணலதனின் ஏற்பாட்டில் சக்தி பூஜை வழிபாடுகளுடன்
நிகழ்வு இடம்பெற்றது.
மேல் மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர் பீடத்தின் சக்தி சுவீஸ் சுரோஸ் அவர்களின் நிதி பங்களிப்புடன் வீடு நிர்மாணிக்கப்பட்டது.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வீட்டினை பயனாளியிடம் கையளிதார்.