அம்பாறை திருக்கோவிலில் சேவற்கொடியோன் அமைப்பிற்கான சீருடை அறிமுக நிகழ்வு

0
285

கதிர்காம பாத யாத்திரியர்களுக்கான குடிநீர் வழங்குதல் மற்றும் சமூக சேவைகளை முன்னெடுக்கும் நோக்குடன், திருக்கோவில் பிரதேச இளைஞர்கள்
ஒன்றிணைந்து சேவற்கொடியோன் எனும் ஆன்மீக மற்றும் சமூக சேவை அமைப்பு ஒன்றினை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் சேவற்கொடியோன் அமைப்பின் அங்குரார்ப்பணம் மற்றும் அமைப்புக்கான சீருடை அறிமுக நிகழ்வு அமைப்பின் தலைவர் இந்திரமோகன்
தலைமையில் திருக்கோவில் 2 கிராம அபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, அமைப்பிற்கான சீருடை மற்றும் கதிர்காம பாத யாத்திரியர்களுக்கு
குடிநீர் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சதிசேகரன், கிராம நிருவாக உத்தியோகத்தர் கந்தசாமி, சேவற்கொடியோன் நிர்வாகிகள்
அமைப்பின் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் சேவற்கொடியோன் அமைப்பானது திருக்கோவில் பிரதேச இளைஞர்களை ஒன்றிணைத்து, ஆன்மீக மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சேவைகளை முன்னெடுக்கும்
நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.