அம்பாறை மாவட்டம் கல்முனைக் கரையோரப் பிரதேசங்களில்; நேற்று கரைவலை மீனவர்களுக்கு சுமார் ஐந்து இலட்சம் பெறுமதியான கீரிமீன்கள் கரைவலைகளுக்கு பிடிபட்டது. கடல் கொந்தளிப்பு காரணமாக காலநிலை அவதான நிலையம் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்ட போதிலும் ஆழ் கடல் இயந்திரங்கள் கடலுக்குப் போகாத நிலையில் கரைவலை மீனவர்கள் பல இடங்களில் தங்களது தொழிலை மேற்கொண்டுள்ள நிலையில் தனியார் கரைவலைகளுக்கு சுமார் ஐந்து லெட்சம் பெறுமதியான கீரி மீன்கள் பிடிபட்டது.
அதனடிப்படையில் பிரதேச மக்களுக்கு இலகுவான முறையில் கிலோ 500 ரூபா வீதம் தற்போது விற்கப்பட்டு வருகின்றன. சென்ற வாரங்களில் ஒரு கிலோ கீரிமீன்கள் 800ரூபா.900 ரூபா விற்ற நிலையில் அதிக மீன்கள் பிடிபட்டதால் ஒரு கிலோ மீன்கள் 500 ரூபாவுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பு பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.