அம்பாறையில் இரண்டு குழந்தைகளின்
தாய் மீது பாலியல் துஸ்பிரயோகம்

0
262

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சந்தேகநபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த யூலை மாதம் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை அயலவர் ஒருவர் கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த பெண் அவரது குடும்பத்தாரோடு மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டில் கணவன் இல்லாத நிலையில் இரவு 7 மணியளவில் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவர் தன்னை துஸ்பிரயோகப்படுத்தியதாகவும் குறித்த நபர் 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட காரைதீவு பொலிஸ் நிலையம் தனக்கு நீதியான நடவடிக்கை எடுக்க தவறி உள்ளதுடன் தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டிற்கமைய காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவினால் சம்பவம் தொடர்பாக விசாரணை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.