அம்பாறையில் வர்ண அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தல்

0
425

வெசாக் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ,அம்பாறை பொலிஸ் நிலையம் உட்பட ஏனைய பிரதேச பொலிஸ் நிலையங்களில் வர்ண அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, காரைதீவு, பெரியநீலாவணை, பாதுகாப்பு படை காவலரண்கள், அம்பாறை மாவட்ட அரச காரியாலயங்கள், அரச வர்த்தக நிலையங்கள், தனியார் வர்த்தக நிலையங்கள், விகாரைகள் போன்றவற்றில் வர்ண அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தவிர கொரோனா அனர்த்தத்திற்கும் மத்தியிலும் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் என பலரும் இணைந்து இந்த வெசாக் கூடுகளை தத்தமது பாதுகாப்பு அரண்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

நாட்டில் பரவலாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த வெசாக் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனால் வழமையாக நடைபெறும் வெசாக் தன்சல் போன்ற எவ்வித விசேட நிகழ்வுகளுமில்லாது கொரோனா கட்டுப்பாட்டுடன் கூடிய ஆராதணைகளுடன் மட்டுமே இந்த வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.