அரச மருந்தாளர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

0
192

அரச மருந்தாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 08.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் 23 மருந்தாளர்கள் இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதனால், பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தடை ஏற்பட்டதாகவும், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.