ஆபிரிக்க பன்றி காய்ச்சல் வடக்கு மாகாணத்திலும் பதிவு!

0
83

மேல் மாகாணத்தில் பதிவான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வடக்கு மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கின்றன எனவும் இந்த நோயைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்தில் 4 பண்ணைகளில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளது.
அத்துடன் இது, வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளது.
கடந்த வார தரவுகளின்படி, மேல் மாகாணத்தில் சுமார் 70 ஆயிரம் பன்றிகள் உள்ளன.
இவற்றில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பன்றிகள் இந்த நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.