ஆறுமுக நாவலரின் 145ஆவது நினைவுதினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு

0
29

சிறீ ல சிறீ ஆறுமுக நாவலரின் 145ஆவது நினைவு தினம் இன்று காலை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள நாவலரின் சிலையடியில் நகர சபை செயலாளர் அ. பாலகிருபன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, ஆறுமுக நாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆறுமுக நாவலரின் பணிகள் தொடர்பில் நினைவுரைகளை பாடசாலை மாணவர்களும், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஓட்டோ உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாவலரின் சிலையானது ஓட்டோ உரிமையாளர் சங்கத்தின் இலுப்பையடி தரிப்பிட சாரதிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.