இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்தும், உயிரிழந்த யாழ்ப்ப்பாண மீனவர்களுக்கு அஞ்சலி செலும் முகமாகவும், நேற்று மன்னாரில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையினால் இடம்பெற்ற அனர்த்தத்தின் போது, யாழ்ப்பாணம் பருத்தித்துறையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த 2 மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கண்டித்தும், இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மாவட்ட இணைப்பாளர் எ.பெனடிற் குரூஸ் தலைமையில், மன்னார் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, அமைதியான முறையில், போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது, யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன், இந்திய மீனவர்களின் வருகைக்கு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கண்டனம் வெளியிட்டனர்.