இந்தியாவில்இ ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருவர் வீதி விபத்தினால் உயிரிழப்பதாக அண்மையத் தரவுகளில் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் வீதி விபத்தினால் 172,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆண்டில் 10,000 சிறுவர்கள் பலியாகியதாகவும் கூறப்படுகிறது. அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமையே அதிக விபத்துக்கள் சம்பவிக்க காரணம் என குறிப்பிடப்படுகிறது. இந்தியா, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஐ விபத்துக்களுக்காக செலவிடுகிறது.