இனியும் ஜனாதிபதியுடன் பேசி பிரியோசனம் இல்லை! சர்வமதக்கூட்டத்தை புறக்கணித்தோம்.ஆறுதிருமுருகன்,

0
121

ஏற்கனவே ஜனாதிபதியிடம் முன்வைத்த  கோரிக்கைகளுக்கு  எந்தவித ஆக்கபூர்வமானதீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பிரயோசனம் இல்லை என்பதால் ஜனாதிபதியுடன் சந்திப்பை புறக்கணித்தோம் என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்கள் சந்திப்பில்  நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் ஆறுதிரு முருகன்  கலந்து கொள்ளலாமை தொடர்பில்  வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

கடந்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தேசிய தைப்பொங்கல்  நிகழ்வில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனத்தில் நல்லை ஆதீன குரு முதல்வருடன்  என்னையும் சந்தித்திருந்தார் 

அதன் போது பல விடயங்களை நாங்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தோம் 

அவற்றை  உடனடியாகவே செயற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம் ஆனால் அதில் எந்த விடயமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை

 அதன் காரணமாகவே  யாழ்  மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடன் சர்வ மத தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் இலங்கை இந்துமன்றத்தின் உப தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளர் ஆகிய கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

மேலும் நல்லை ஆதீன குரு முதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவை இல்லை

 அதே போல  சர்வ மத தலைவர்களின் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது அதேபோல எங்களது அடையாள அட்டை இலக்கங்களும் அதிகாரிகளால் கேட்கப்பட்டது

 ஆனால்  ஏற்கனவே ஜனாதிபதியிடம் முன்வைத்த  கோரிக்கைகளுக்கு ஜனாதிபதியினால் எந்தவித ஆக்கபூர்வமானதீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பிரயோசனம் இல்லை என்பதனாலேயே நானும் நல்லை ஆதீன குருமுதல்வரும் இன்றைய ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின்கூட்டத்தில்  பங்கேற்கவில்லை என தெரிவித்தார்