இன்று 2,572 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
286

இலங்கையில் மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,572 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 174,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.