இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க ஊழியர்கள் மீது தாக்குதல்

0
179

கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அலுவலகத்துக்கு, இன்று (1) காலை வந்த இருவர், ஊழியர்களுடன் முறுகலில் ஈடுபட்டுள்ளதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இது தொடர்பில் ராஜகிரிய பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் ஸதலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த காரியாலயத்தில் இன்று (1) காலை 10.00 மணியளவில் தொழிற்சங்க கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.