இலங்கை மக்களை நசுக்கும் ஐஎம்எவ் : அம்பலப்படுத்திய அமைச்சர்

0
149

சர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்களை அதிகம் நெருக்குவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.எம்.எப் நிபந்தனைகளின் காரணமாகவே மின்சார கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆட்சிக்கு வந்தவுடன் கடனை பெற்று தருவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்ததாகவும் கூறினார்.வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.