கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.
அத்துடன், இலங்கையை 4ஆவது நிலை எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.
எனவே, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் அங்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.