இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளனர்!

0
131

இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தமிகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு ஆணும் 2 பெண்களும் 3 குழந்தைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு வர உள்ளனர்.