இலங்கையில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, சீன நாட்டவர்கள் பலர் அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் அதேநேரம், அவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு, இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட சீன தூதரகம், இந்த சம்பவம், இரண்டு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.