பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களை, வருங்கால வைப்பு நிதியுடன் இணைக்காமல் வர்த்தக நிலையத்தை நடத்துவதற்கு 400,000 ரூபாவை வர்த்தகரிடம் இருந்து இலஞ்சமாக கேட்ட அதிகாரியொருவரை கைது செய்ததாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்கு 11 இலட்சம் ரூபாவை நிதியாக செலுத்த வேண்டியுள்ளதாகவும், அத்தொகையை செலுத்தாமல் இருக்க தேவையான வேலைகளை செய்வதற்கு 4 இலட்சம் ரூபா பணம் கேட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த, தொழிலாளர் திணைக்களத்தின் கள அதிகாரி என கூறப்படும் 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.